கடந்த 48 மணிநேரத்தில் இரு பல்கலை மாணவிகள் கொடூரமான முறையில் படுகொலை!
http://about-school-girls.blogspot.com.ar/
Gayathri Siva
வல்லுறவிற்குட்படுத்தப்பட்டும் கூரிய ஆயுதத்தினால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படு்தியுள்ளது.
கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த இந்த யுவதி கொழும்பு திரும்புவதற்காக கடந்த 24ம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றிருந்த போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் நடந்து 24 மணித்தியாலங்கள் செல்லாத நிலையில்
கொஉடதென்னை, வராப்பிட்டிய எனுமிடத்தில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து 24 வயதுடைய யுவதி ஒருவரது சடலத்தை மாத்தளை பொலிஸார் இன்று (25) மீட்டுள்ளனர்.
இவர், பேராதனை பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள மாணவி எனவும் இவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது உடம்பில் பல காயங்கள் தென்படுவதாக தெரிவித்த பொலிஸார், நேற்று திருமண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் இவர் வீடு திரும்பாததை அடுத்தே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும்தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


